வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2016ம் ஆண்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியின்மூலம் வவுனியாவில் மிவும் வறிய மக்களுக்கு வீட்டுக்கூரைசீற், கூரைத்தகரம், சீமந்து, சீமந்துக்கல் மற்றும் பொது அமைப்புக்களுக்கு பிளாஸ்ரிக் கதிரைகள், வறிய மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.
ஒதுக்கப்பட்ட நிதியின்மூலம் வவுனியா நகரசபையினால் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட இன் நிகழ்வு வவுனியா நகரசபை செயலாளர் T.தர்மேந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, பிரதேச செயலாளர் கா.உதயராசா மற்றும் வவுனியா நகரசபையின் அலுவலக உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்களின் தலைவர், செயலாளார், அங்கத்தவர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.








































