பூமி, செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள் வானில் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு இன்று (22.05) காலை நிகழவுள்ளது.
தற்போது பூமியில் இருந்து 4.8 கோடி மைல் தொலைவிலுள்ள செவ்வாய் கிரகம், இந்த நிகழ்வின்போது சுமார் 4.6 கோடி மைல் தொலைவுக்கு பூமியை அண்மித்து வரும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பூமி, செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வருகின்றன.
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு இதே போன்று நிகழும்போது செவ்வாய் கிரகம் சுமார் 3.6 கோடி மைல் தொலைவு வரை பூமியை அண்மித்து வரும் என்று அமெரிக்காவின் நாஸா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியன், பூமிக்கு இடையே புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு, கடந்த வாரம் நிகழ்ந்தது. அப்போது, சூரியனில் ஒரு சிறிய கரும்புள்ளி போன்று புதன் கிரகம் தென்பட்டது. இது, ஒரு நூற்றாண்டுக்கு 13 முதல் 14 முறை மட்டுமே நிகழும்.






