வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பூப்பந்து(பட்மிண்டன்) சுற்றுப் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் 15 வயது மற்றும் 19 வயதுப் பிரிவு மாணவர்கள் சம்பியன் பட்டத்தை தமதாக்கியுள்ளனர்.
மன்னார் பொது விளையாட்டரங்கில் நேற்று (21.05.2016) நடைபெற்ற இறுதியாட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை எதிர்த்து மன்னார் பற்றிமா மத்திய மகாவித்தியாலயம் பலப் பரீட்சை நடாத்தியது.
மூன்று ஒற்றையர் ஆட்டங்கள், இரண்டு இரட்டையர் ஆட்டங்கள் என மொத்தம் 5 செற்களைக் கொண்ட ஆட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் 3:0 என நேர் செற் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனானது.
மாகாணமட்டப் போட்டிகளில் வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தின் 15 வயதுப் பிரிவு அணி இத்துடன் 5வது முறை தொடர்ச்சியாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


















