வாழைப்பழம் தொண்டையில் இறுகியதால் பறிபோன குழந்தையின் உயிர்!!

630

Baby

வாழைப்பழத் துண்டு தொண்டையில் இறுகியதன் காரணமாக ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பதுளை கயிலாகொட பிரதேசத்தில் நடந்துள்ளது.

குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தாய் குழந்தைக்கு வாழைப் பழத்தை ஊட்டிக்கொண்டிருந்த போது அதில் ஒரு துண்டு குழந்தையின் தொண்டையில் இறுகியுள்ளது.

இதனையடுத்து தாய் குழந்தையை பதுளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை திடீரென இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு வயதும் 4 மாதங்களுமே ஆன ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

வாழைப்பழத்துண்டு தொண்டையில் இறுகியதன் காரணமாக நிமோனியா ஏற்பட்டே இந்த குழந்தை இறந்ததாக பிரேதப் பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.