வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று(23.05) திங்கட்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த பொங்கல் விழாவிற்குச் செல்லும் அடியார்களின் நன்மைகருதி விசேட போக்குவரத்துச் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர் தெரிவித்தார்.
இச் சேவையானது இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளதாகவும், போக்குவரத்து சேவை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு கொள்ளுமாறு தெரிவித்தார்.
வவுனியா சாலை 024 222 3449








