வவுனியா தெற்கு வலயக்கல்வி ஆசிரியர் மாநாடு 2016!!

895

Vavuniya

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.செ.அன்ரன் சோமராஜா தலமையில் ஆசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது.

வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் ஏற்ப்பாட்டில் ஆசிரியர் மாநாடு ஏதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் வவுனியா நகரசபை மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஆசிரியர்களுக்கான தொழில்சார்வாண்மையை ஏற்ப்படுத்துதல் , தொழில் சார் ஊக்கத்தை வழக்குதல், நவீன கற்பித்தல் சாதனங்களின் மூலம் கற்பித்தலை மேம்படுத்துதல், கற்பித்தல் சார் அனுபவங்களை வழங்குதல் போன்றவற்றை நோக்காக கொண்டே இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்த மாநாடானது ஆய்வரங்கு, கண்காட்சி, பேருரைகள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இடம்பெறவுள்ளது.

கண்காட்சி வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மண்டபத்தில் தரம் 1 தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரையிலான மாணவர்களின் அனைத்து பாடங்களுக்குமான கற்பித்தல் சாதனங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.