பாடசாலை ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 14 வயது மாணவன்..!

571

vavuniyaவகுப்பறையின் கதவை பூட்டிவிட்டு, பாடசாலை ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட 14 வயது மாணவனுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கும் படி உத்தரவிட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி குறித்த பாடசாலையின் ஆசிரியை குற்றம்சாட்டப்பட்ட மாணவனுக்கு தனியாக பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது, ஆசிரியையை கட்டியணைத்த அந்த 14 வயது மாணவன், அவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டான்.

அவனது பிடியில் இருந்து தப்பி கதவருகே ஓடிய ஆசிரியை, கதவு பூட்டப்பட்டு இருந்ததை அறிந்தார். ஆசிரியையின் கூச்சலை கேட்ட இதர ஆசிரியர்கள் கதவை உடைத்து ஆசிரியையை மீட்டனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை அந்த பாடசாலைக்கு வருவதை நிறுத்திக்கொண்டு ´பிஞ்சில் பழுத்த´ அந்த மாணவன் மீது பொலிசில் புகார் அளித்தார்.

பொலிசாரின் விசாரணையில் அந்த மாணவன் ஏற்கனவே ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு, அங்கிருந்தபடியே சம்பவம் நடந்த பாடசாலையில் பயின்று வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் அவன் மீது பொலிசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை 4 ஆண்டுகள் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கும்படி உத்தரவிட்டார்.