வவுனியா நெடுங்கேணியில் காணி அபகரிப்பு : மக்கள் போராட்டம்!!

961

 
வவுனியா நெடுங்கேணி சின்னடம்பன் கிராமத்தில் நேற்று (27.05.2016) காணியை கையகப்படுத்த முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதனை எதிர்த்து மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலுள்ள மக்களை குடியேற்றுவதற்காக சின்னடம்பன், செங்கல்படை குளத்தின் கீழான விவசாயக் காணிகளை துப்பரவு செய்யும் பணி லைக்கா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும் குறித்த காணி சின்னடம்பன் மக்களால் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தமைக்கான உறுதிப்பத்திரங்கள் காணப்படுகின்றன.

இதனையடுத்து நேற்று (27.05.2016) இப்பகுதி காணிகளை துப்பரவு செய்யும் வேளையில் மக்கள் தமது உறுதிப்பத்திரங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகண சபை உறுப்பினர்களாக லிங்கநாதன், தியாகராசா, கிராம அலுவலர் ஆகியோர் தலையிட்டு காணி துப்பரவுப் பணியினை தற்காலிகாமக இடைநிறுத்தினர்.

குறித்த விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவருவதாக வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

news (1) news (2) news (3) news (4) news (5) news (6) news (7) news (8) news (9) news (10) news (11) news (12) news (13) news (14)