வவுனியாவிலும் வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!!

556

 
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் அடையாள பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளீர்ப்பு பயிற்சி நடவடிக்கைகளுக்காக மருத்துவர்களுக்கான நியமனங்களை வழங்கும் போது மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தே இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

அத்துடன் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரச சிகிச்சைப் பிரிவு தொடர்ந்தும் இயங்கியதுடன் சிறுவர் பிரிவு, சிறுநீரகப் பிரிவு மற்றும் பிரசவ விடுதிகளுக்கு இந்த பணிப் பகிஷ்பரிப்பு பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்படுகின்றது.

IMG_9955 IMG_9961 IMG_9978 IMG_9980