இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை..!

494

vavuniyaஎதிரிகளாக இருக்கும் இஸ்ரேல் – பாலஸ்தீன நாடுகள் பகைமையை மறந்து மீண்டும் சமாதான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது.

அமைதி பேச்சுவார்த்தையை விரும்பும் நல்லெண்ணத்தின் அடையாளமாக 104பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சமீபத்தில் அறிவித்தார்.

இதில் முதல் கட்டமாக நேற்று இஸ்ரேல் சிறையில் இருந்து 26 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, இஸ்ரேல் – பாலஸ்தீன குழுவினருக்கிடையே முதல் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இருநாட்டு அதிகாரிகளும் சந்தித்து கைகுலுக்கும் காட்சிகளை இஸ்ரேல் ஊடகங்கள் நேற்று வெளியிட்டன.

எனினும், பேச்சுவார்த்தை நடந்த இடம் பற்றிய தகவல்களை இரு நாடுகளுமே ரகசியமாக வைத்துள்ளன.

இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனயர்களின் பிரேதங்களும் விரைவில் பாலஸ்தீன அரசிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.