வவுனியாவில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளைஞன் பலி : நால்வர் படுகாயம்!!

534

 
வவுனியா நெடுங்கேணி ஊஞ்சல்கட்டிப் பகுதியில் நேற்று(01.06.2016) மாலை உறவினர்களுக்கு இடையே ஏற்ப்பட்ட முரண்பாட்டில் ஏற்ப்பட்ட கத்திக்குத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா நெடுங்கேணி ஊஞ்சல்கட்டி பிரதேசத்தில் நேற்று மாலை உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு கத்திக்குத்து வரை சென்றுள்ளது. இக் கத்திக்குத்தில் பழனியாண்டி ஜெயசீலன் ( 28வயது) என்ற இளைஞன் பலியானதுடன் இருபெண்கள் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கத்திக்குத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட நபரும் காயமடைந்துள்ளதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 2 3