வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஆரம்பப்பிரிவில் இன்று (03.06.2016) காலை 9.30 மணியளவில் பாடசாலை அதிபர் சீ.மரியநாயகம் தலைமையில் கல்விக் கண்காட்சி நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.தவரட்னம் (பிரதிக்கல்விப் பணிப்பாளர்-கல்வி அபிவிருத்தி,வவுனியா தெற்கு வலயம்), சிறப்பு விருந்தினராக திருமதி.எம்.தேவசேனா (உதவிக் கல்விப் பணிப்பாளர், ஆரம்பப்பிரிவு) மற்றும் திரு.சி.சிறிரங்கநாதன் (பிரதி அதிபர், வ.த.ம.ம.வி ஆரம்பப்பிரிவு) , பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இக் கண்காட்சியில் மாணவர்களின் கண்கவர் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.








































