வவுனியா ஓமந்தை பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் இலங்கையில் முதல் தடவையாக விஷேட தேவைக்குட்பட்டோருக்கான மலசலகூடத்தினை புதிய நவீன முறையில் கண்டுபிடித்துள்ளார்.
இக் கண்டுபிடிப்பு இன்று (10.06.2016) காலை வவுனியா அருந்ததி மண்டபத்தில் ஊடகவியலாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் இப்புதிய மலசலகூடம் தொடர்பாக இங்கு கருத்துத் தெரிவித்த கண்டுபிடிப்பாளர் திரு.என். என்.ஜக்சன்,
வவுனியா ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் வசித்து வருவதாகவும் சின்ன வயதிலிருந்து கண்டுபிடிக்கும் ஆற்றல் தன்னுடன் ஊறியுள்ளதாகவும் எதையாவது சாதிக்கவேண்டும், தன்னால் பொதுமக்களுக்கு எதையாவது பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் பல கண்டுபிடிப்புக்களை அறிமுகம் செய்துள்ளபோதிலும் பெரியளவில் வரவேற்றபினை பெற்றுத்தரவில்லை என்று தெரிவித்த என்.என்.ஜக்சன்,
தனது 30வது வயதில் விஷேட தேவைக்குட்பட்டோருக்கான மலசலகூடத்தினை அமைப்பதற்கு தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தபோதும் அதனை சரியான முறையில் பயன்படுத்தியதால் தனக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
திருமணமாகி ஒரு ஆண் பிள்ளைக்குத் தந்தையான ஜக்சன். அலுவலகத்திற்கு, பொது இடங்களுக்கு, பயணம் மேற்கொள்ளும்போதும், மிகவும் வசதியாகவும் தண்ணீர் வசதி இன்றியும் வீடு போன்ற இடங்களில் இப்புதிய மலசலகூடத்தினை எடுத்துச் செல்ல முடியும்,
அத்துடன் துர்நாற்றம் இல்லை இலகுவில் எடுத்துச் செல்லக்கூடிய வசதி, அத்துடன் சிறுநீரை சேகரித்து வைக்கும் வசதி, படுக்கையிலிருக்கும் நோயாளிகளுக்கு இது அதிகளவில் பயனைத்தரக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
ஆகக்குறைந்தது ஜந்து வருட உத்தரவாதம். இதன் உற்பத்திப் பெறுமதி பத்தாயிரம் ரூபா என்றும் தெரிவித்தார். அத்துடன் புதிய கண்டுபிடிப்பாளர்களும் தமது கண்டுபிடிப்புக்களை வெளி உலகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்றும் அதை ஊடகங்கள் ஊடாக உலகத்திற்கு எடுத்துச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டார்.
இன்னும் சில கண்டுபிடிப்புக்களை தான் மேற்கொண்டுள்ளதாகவும் வெகுவிரைவில் அதனையும் இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாகவும் தெரிவித்த ஜக்சன் சம்பூர் அனல் மின்நிலையத்திற்கு தம்மிடம் ஒரு தீர்வு இருப்பதாகவும் அதிகாரிகள் அது தொடர்பாக தன்முடன் தொடர்பு கொண்டால் அவ் உதவியை பெற்றுக் கொடுக்க தான் தயாராக இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.










