திருடிய பொருட்களை மன்னிப்புக் கடிதத்துடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்..!

533

robஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரத்தில் பாலியல் வன்முறை சார்ந்த சேவை மையம் ஒன்று இயங்கிக் வருகிறது.

இந்த மையத்தினுள் கடந்த 31-ம் திகதி இரவு புகுந்த திருடர்கள் அங்கிருந்த ஆறு கனணி சாதனைங்களையும், புதிய மடிக் கனணி ஒன்றினையும் திருடிச் சென்றனர்.

சோதனைக்கு வந்த காவல்துறையினர் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கேன்டி ஸ்டாலிங்சிடம் தொலைபேசியில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர். அவர்களின் தகவல் சேகரிப்பு முழுவதும் அந்த சாதனங்களில் சேகரித்து வைக்கப்பட்டிருந்ததால் அவர் செய்வதறியாது திகைத்தார்.

காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணையில் ஈடுபட்டனர். கேன்டியும் தனது வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டார். சிலமணி நேரம் கழித்து அவருக்கு மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அவரின் நிறுவனத்தில் நடமாட்டம் இருந்ததாகக் கூறி காவல்துறையினர் அவரை மறுபடியும் அங்கு வருமாறு அழைத்தனர். அங்கு சென்றபோது கேன்டிக்கு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

திருடர்கள் அவரது நிறுவனத்தில் இருந்து எடுத்துச்சென்றிருந்த பொருட்கள் அனைத்தையும் மீண்டும் அங்கு கொண்டுவந்து வைத்திருந்தனர். அத்துடன் ஒரு மன்னிப்புக் கடிதத்தையும் இணைத்திருந்தனர்.

மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் உங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிட்டட்டும் என்றும் அதில் எழுதியிருந்தனர். இந்த நிகழ்ச்சி மூலம் இவர்களின் சேவை வெளியுலகிற்குத் தெரியவர, அவர்களுக்கு நன்கொடைகளும் குவியத் தொடங்கியுள்ளன.