வவுனியாவில் வீதியை விட்டு விலகி பாலத்திற்குள் பாய்ந்த டிப்பர் வாகனம்!!

1296

 
வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் இன்று(14.06.2016) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் டிப்பர் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

வேகமாக பயணித்த வாகனத்தின் சாரதி உறங்கியதால் இவ் விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

சாரதி உறங்கியதால் வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் சாரதிக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

1 2 3 4 5 6