அனுமதி பெறாமல் கடைக்குச் சென்ற மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்..!

536

pistolஆப்கானிஸ்தானில் உள்ள சஹர் தாரா மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னிடம் அனுமதி பெறாமல் கடைக்குச் சென்ற மனைவியை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடைடாட் என்ற இந்த கொலைபாதகனின் மனைவிக்கு 24 வயதுதான் ஆகிறது. இவனது மனைவியை கடைவீதியில் தனியாக பார்த்ததாக நண்பர்கள் இவனிடம் போட்டுக் கொடுக்க உடனே வீட்டிற்கு வந்துள்ளான் அங்கு மனைவி இல்லாததைக் கண்டு ஆவேசமடைந்தான்.

சிறிது நேரம் காத்திருக்க மனைவி வீட்டிற்குள் வந்தாள். இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது.

என்னுடைய அனுமதி பெறாமல் கடைக்கு எப்படிச் செல்லலாம் என்று கேட்டுவிட்டு உடனேயே சற்றும் எதிர்பாராதவிதமாக துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுக்கொன்றான்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாகியுள்ள கொலையாளியை பிடிக்க பொலிஸ் வலை விரித்துள்ளது.