டயானா இறந்தது குறித்த புதிய தகவல் – இங்கிலாந்தில் புதிய சர்ச்சை..!

507

accidentஇளவரசி டயானா இறந்தது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல்கள் உண்மைதானா என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்று இங்கிலாந்து பொலிசார் கூறியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு தனது நண்பர் டோடி பயட்டுடன், பாரிசில் உள்ள ஹோட்டலுக்கு சென்றிருந்தார்.

அவர்களை படம் பிடிக்க ´பாப்பராசி´ என்றழைக்கப்படும் புகைப்படக் கலைஞர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்களின் கண்ணில் படாமல் இருக்க ஹோட்டலின் மற்றொரு வழியாக டயானா, பயட் இருவரும் சொகுசு காரில் அவசரமாக புறப்பட்டு சென்றனர்.

டயானாவின் சாரதி காரை ஓட்டி சென்றார். டயானா வெளியில் செல்வதை பார்த்துவிட்ட புகைப்பட கலைஞர்கள் அவர்களை துரத்தினர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க அதிவேகமாக சென்ற போது ஒரு பாலத்தில் கார் பயங்கரமாக மோதி விபத்தில் சிக்கியது. இதில் டயானா, பயட் ஆகியோர் இறந்தனர்.

இந்த விபத்து குறித்து ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிசார் விசாரித்து வந்தனர். கடந்த 2008ல் பிரித்தானிய நீதிமன்றத்தில் டயானா இறப்பு குறித்து விசாரணை நடந்தது.

அப்போது, டயானா தனது நண்பர் பயட்டுடன் சென்ற போது புகைப்பட கலைஞர்களிடமிருந்து தப்பிக்க சாலை விதிமுறைகளை மீறி கார் வேகமாக புறப்பட்டு சென்றது. சாரதி போதையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது இளவரசி டயானா மரணம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது என்று இங்கிலாந்து பொலிசார் தெரிவித்துள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், டயானா இறப்பு தொடர்பாக சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவை பொருத்தமானவைதானா, நம்பத்தகுந்த தகவலா என்று சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர் என்றனர்.

ஆனால், என்ன தகவல் கிடைத்துள்ளது என்பதை தெரிவிக்க பொலிசார் மறுத்துவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.