கவுதம் கம்பீருக்காக தன்னை தேடி வந்த வாய்ப்பை விட்டுக் கொடுத்துள்ளார் வீரேந்திர ஷேவாக்.
தற்போதைய நிலையில் கம்பீரும், ஷேவாக்கும் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் மீண்டும் இடம் கிடைக்குமா என்ற சந்தேகமும் உள்ளது.
இந்த நிலையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சக டெல்லி வீரரான கம்பீருக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.
அதாவது, இங்கிலாந்தின் எஸ்ஸக்ஸ் கவுண்டி அணிக்காக சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் கவுதம் கம்பீர்.
இதுமுதலில் ஷேவாக்கிற்கு வந்ததும், அவர் தான் கம்பீரின் பெயரை பரிந்துரை செய்ததும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், எஸ்ஸக்ஸ் அணிக்கு விளையாட கிடைத்த வாய்ப்பை ஷேவாக், கம்பீருக்கு திருப்பி விட்டுள்ளார்.
ஷேவாக் கிடைக்காததால்தான் கம்பீரை நாடியதாக எஸ்ஸக்ஸ் பயிற்சியாளர் பால் கிரேசன் கூறியிருப்பது கவனத்துக்குறியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷேவாக் ஏன் மறுத்தார் என்பதற்கான காரணத்தை தன்னால் கூற முடியாது என்றும் கிரேசன் தெரிவித்துள்ளார்.