குடிபோதையில் ரகளை செய்த பனேசர் அணியிலிருந்து நீக்கம்..!

395

panesarகுடிபோதையில் ரகளை செய்த பனேசர், சசக்ஸ் கவுண்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான மொன்டி பனேசர்(வயது 31) இந்திய வம்சாவளி வீரர் ஆவார்.

இவரது மோசமான பார்ம் காரணமாக ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படவில்லை.

சமீபத்தில் கடந்த 5ம் திகதி போதையில் இரவு கிளப் காவலாளிகள் மீது சிறுநீர் கழித்து மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து பனேசருடனான, சசக்ஸ் கிளப் ஒப்பந்தத்தை முடித்து கொள்ள முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 2010ம் ஆண்டு முதல் சசக்ஸ் அணியில் விளையாடி வருகிறேன்.

இந்த போட்டிகளில் எனது திறமையை வெளிப்படுத்தியதால், இங்கிலாந்து அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இந்த ஆண்டு களத்துக்கு வெளியே நடந்த சில செயல்களால் ஏமாற்றமே மிஞ்சியது.

இதற்காக எனது சசக்ஸ் கிளப் நிர்வாகம் நண்பர்களிடமும், ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார்.