பிரெஞ்சு நபர் மீது காதல் கொண்ட மனைவி: துண்டு துண்டாக வெட்டிய கணவன்!!

246

1459149523-8816
ஐதராபாத்தில் பேஸ்புக் காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக கணவரிடம் விவாகரத்து கோரிய மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்.ஐதராபாத்தில் வசித்து வந்த ரூபேஷ்(35), சிந்தியா(32) ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர், இவர்களுக்கு ஷான்யா(7) என்ற மகள் உள்ளார்.சிந்தியாவுக்கு பேஸ்புக் மூலம் பிரெஞ்சு நாட்டு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது, இதனைத் தொடர்ந்து பிரெஞ்சு நபரை திருமணம் செய்யப்போவதாகவும் தனக்கு விவாகரத்து வேண்டும் என தனது கணவரிடம் சிந்தியா கூறியுள்ளார்.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த ரூபேஷ் கத்தியால், சிந்தியாவை சரமாரி வெட்டியதில், சிந்தியா ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ரூபேஷ், சிந்தியாவின் உடலை துண்டு, துண்டாக வெட்டி ஒரு சூட்கேசில் அடைத்து காரில் வைத்துக்கொண்டார். பின்னர் மகள் ஷான்யாவையும் காரில் அழைத்துக்கொண்டு ரங்காரெட்டி மாவட்டம், ஷென்ஷாபாத் அருகே மதனப்பல்லி என்ற இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றார்.

அங்கு சூட்கேஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு இரவு 7 மணியளவில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது சேற்றில், காரின் டயர் சிக்கிக்கொண்டது. இதில் அப்பகுதி மக்களிடம் அவர் சிக்கிக்கொண்டதையடுத்து, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று ரூபேஷிடம் விசாரணை நடத்தினர்.அதில், தனது மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு சடலத்தை இங்கு கொண்டு வந்து எரித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பொலிசார் வழக்குபதிவு செய்து ரூபேஷை கைது செய்தனர்.