பேஸ்புக்கில் மலர்ந்த காதல்: காதலனை தேடி வீட்டை விட்டு ஓடிய பெண்!!

327

facebook-性别

தமிழகத்தில் பேஸ்புக் காதலனை தேடிச் சென்ற பெண்ணை தீவிர தேடுதலை வேட்டைக்கு பின்னர் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.விருதுநகரை சேர்ந்த ராமர் என்பவரின் மகள் கவிதா(21) நர்ஸிங் டிப்ளமோ படித்து வருகிறார்.இவருக்கும் கிருஷ்ணகிரியை சேர்ந்த நெடுங்கல்லை சேர்ந்த லொறி டிரைவரான பிரபாகரன்(24) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.இருவரும் முதலில் நண்பர்களாக பழகி வந்த நிலையில், பிறகு காதலிக்க தொடங்கினர்.

இதற்கு கவிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடந்த மாதம் 31ம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய கவிதா வீடு திரும்பவில்லை.எங்கு தேடியும் கிடைக்காததால் கவிதாவின் பெற்றோர், பிரபாகரன் தன் மகளை கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட விருதுநகர் பொலிசார் கவிதாவின் செல்போன் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.தொடர்ந்து விசாரணை நடத்தியதில் நேற்று நெடுங்கல் கிராமத்திற்கு சென்று கவிதாவை மீட்டனர்.இதற்கு அங்கிருந்த நபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இருவருக்கும் கோயிலில் திருமணம் நடந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.எனினும் கவிதாவின் பெற்றோர் கடத்தல் புகார் அளிப்பதால் இருவரையும் விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றனர்.