வீரப்பன் மனைவியாக நானா : குலுங்கி குலுங்கி சிரித்த ப்ரியாமணி!!

343

priyamaniவீரப்பன் மனைவி கதாபாத்திரத்தில் நான் நடிக்கப் போகிறேனா என்று குலுங்கி சிரிக்கின்றார் நடிகை ப்ரியாமணி. கப்டன் பிரபாகரனில் தொடங்கி சந்தன கடத்தல் வீரப்பனின் கதையை பத்து, பதினைந்து ஆண்டுகளாக துருவி துளாவி நார் நாராக கிழித்து எறிந்து கொண்டிருக்கிறார்கள் சினிமாக்காரர்கள்.

சமீபத்தில்கூட, வனயுத்தம் என்றொரு படம் வெளியானது அர்ஜூன், விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் வெளியான அப்படம் வெற்றிபெறவில்லை.

இருப்பினும் அந்த கதையில் இன்னும் சொல்லப்படாத பக்கங்கள் நிறைய உள்ளன என்று இப்போது ஒரு கன்னட இயக்குனரும் மீண்டும் வீரப்பன் கதையை படமாக்கப்போவதாக களத்தில் இறங்கியிருக்கிறாராம்.

இதற்காக வீரப்பன் பதுங்கியிருந்த காட்டுப்பகுதிகளுக்கு வந்து லொகேசன்களை பார்த்து விட்டு சென்ற அந்த இயக்குனர் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியின் வேடத்தில் நடிக்க பருத்தி வீரன் ப்ரியாமணியை கேட்டாராம்.

அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்த ப்ரியாமணி, வீரப்பன் கதையை திரும்பத்திரும்ப பார்த்து வெறுப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். அதனால் மீண்டும் அதே கதையில் நடித்து அவர்களின் வெறுப்புக்கு ஆளாக நான் தயாராகயில்லை என்று நழுவிக் கொண்டாராம்.