செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்த காட்டு எருமைகள்!!

648

Test Cow

சோதனைக் குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் காட்டு எருமை கன்றுகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

குழந்தை இல்லா தம்பதிக்கு சோதனை குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பேறு கிடைக்கிறது. அதே முறையில் விலங்குகளிலும் இனப்பெருக்கம் செய்ய ஆய்வுப் பணி நடைபெற்றது.

இந்த ஆராய்ச்சியில் முதன் முறையாக கனடாவை சேர்ந்த கால்நடை விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அழியும் இனப்பட்டியலில் இருக்கும் காட்டு எருமைகளை இந்த ஆராய்ச்சிக்கு எடுத்துள்ளனர்.

தற்போது மலைப்பகுதியில் வாழும் அரிய வகை காட்டெருமைகள் உலக அளவில் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையே உள்ளன. அவை நோயினாலும், இயற்கை மாற்றங்களினாலும் அழிந்து வருகின்றன. 5 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே உயிர் வாழ்கின்றன.

எனவே காட்டெருமைகளில் சோதனை குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் வெற்றிகரமாக 3 காட்டெருமை கன்றுகளை உருவாக்கி பிறக்க செய்தனர். இது ஒரு மிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

இச்சாதனை சஸ்கட்சீலன் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்டது. தற்போது இந்த ஆய்வு வெற்றி பெற்றதன் மூலம் அழிந்து வரும் விலங்குகளின் இனத்தை காப்பாற்ற முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.