டெல்லியில் 14 வயது சிறுமியை கடத்தி சென்று கூட்ட வன்புணர்வுக்கு பின்னர் அமிலம் கலந்த பொருளை குடிக்க வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கூட்ட வண்புணர்வுக்கு ஆளான டெல்லி சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடல் உறுப்புகள் அனைத்தும் சிதைக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் அதிர்ச்சியுற்ற டெல்லி மகளிர் ஆணையம் மத்திய அரசு மற்றும் டெல்லி அரசை கடுமையாக எச்சரித்துள்ளது.பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பாதுகாப்பில் மீண்டும் அலட்சிய போக்கையே இரு அரசுகளும் இன்னமும் கடைபிடித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளது.
கூட்ட வன்புணர்வுக்கு பின்னர் அமிலம் கலந்த பொருளை குடிக்க வைத்து சித்திரவதை செய்துள்ளதால், அந்த சிறுமியின் உடல் உறுப்புகள் சிதைந்து மிகுந்த துயரத்துடன் உயிர்ழந்துள்ளதை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.இன்னும் எத்தனை நிர்பயாக்களை இந்த நாடு எதிர் பார்க்கிறது என மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அமைச்சர்கள் அளவில் ஒரு குழுவினை உருவாக்கி ஆவன செய்ய வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.14 வயது சிறுமி பாலியல் கூட்ட வன்புணர்வுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளதற்கு இந்த சமூகமே காரணம் என குற்றம்சாட்டியுள்ள அவர், இதுபோன்று உதவியற்ற நிலையை எப்போதும் உணர்ந்ததில்லை எனவும் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.