வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் 2ம் நாள் நிகழ்வுகள் இன்று (25.07.2016) பாடசாலையின் அதிபர் ச.சுபாஸ்கரன் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஸ்ரீமான் ஆ.நடராஜன் ( இந்திய துணைத்தூதர்) சிறப்பு விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், வடமாகண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் கௌரவ விருந்தினராக தி.திரேஸ்குமார் (மேலதிக அரசாங்க அதிபர்) , கு.சிதம்பரநாதன் (பீடாதிபதி- தே.க.கல்லூரி வவுனியா), ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அறிவொளி நூற்றாண்டு மலர் நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் 2ம் நாள் நிகழ்வுகள் வவுனியா நெற் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கின்றது
வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்திலிருந்து எமது விஷேட நிருபர்.