விண்வெளியிலிருந்து முதல் முறையாக நிலவுக்கு செயற்கைக்கோள்..!

334

GPS_Satellite_NASA_art-iif

பூமியின் துணைக்கோளான நிலாவின் வளிமண்டலம் பற்றி இன்னும் விடைதெரியாத கேள்விகளுக்கு பதில் அறியும் பொருட்டு அடுத்த மாதம் செயற்கைகோள் ஒன்றை ஏவ நாசா முடிவெடுத்துள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

நிலாவினுடைய மெல்லிய வளிமண்டலத்தின் அமைப்பு மற்றும் வடிவம் பற்றி சிறந்த புகைப்படங்களை எடுக்க கார் அளவிலான ஒரு ஆய்வுக்கருவியை (ரோபோ) உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வரும் செப்டம்பர் 6ம் திகதி அமெரிக்க விமானப்படை ரொக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ள இந்த செயற்கைகோளானது பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு அப்பால் உள்ள நாசாவின் விர்ஜினியா விண்வெளி கடற்கரை ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு நிலாவை சென்றடையும்.

விண்ணிலிருந்து ஒரு விண்கலம் அனுப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த விண்கலத்தில் அனுப்பிவைக்கப்படும் ஆய்வுக்கருவியானது நிலாவை சுற்றி வளிமண்டலம் மற்றும் தூசு மண்டலம் பற்றிய விவரமான செய்திகளை அனுப்பும்.

எமக்கு அருகிலுள்ள இந்த துணைக்கோளை பற்றி அறிந்துகொள்வது சூரிய மண்டலத்திலுள்ள மற்ற கோள்கள், விண்பாறைகள் பற்றி அறிய உதவும். இந்த விண்கலம் ஏவப்பட்டு ஒரு மாதத்திற்கு பிறகு அதிலுள்ள
ஆய்வுக்கருவியானது 40 நாட்களுக்கு செயல்படும். 30 நாட்களுக்கு நிலாவின் மேற்பரப்பு பற்றி அது ஆராயும்.

அதி நவீன லேசர் கருவிகளுடன் செயல்படும் இந்த ஆய்வுக்கருவியானது பூமியில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்திற்கு அறிய புகைப்படங்களை அனுப்பி வைக்கும் என்று கூறப்படுகிறது.