பரிசை பெற யாரும் வராததால் 6 கோடி அதிஷ்ட சீட்டு காலாவதி!!

724

mega

அமெரிக்க அதிஷ்ட சீட்டில் விழுந்த 6 கோடி பரிசை பெற ஓராண்டாக யாரும் வராததால் அது காலாவதியானது என அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயோர்க் நகர் ப்ளேலேண்ட் மார்க்கெட் பகுதியில் உள்ள அதிஷ்ட சீட்டு விற்பனை செய்யும் கடையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் திகதி விற்கப்பட்ட அதிஷ்ட சீட்டுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்தது.

அதிஷ்ட சீட்டு முடிவுகள் வெளியாகி பல மாதங்கள் ஆகிய பின்பும் பரிசை பெற யாரும் முன்வரவில்லை. இதனால் பரிசு விழுந்த அதிஷ்ட எண் 1672049 குறித்த விவரம் மீடியாக்கள் மற்றும் சமூக மீடியாக்களில் வெளியிடப்பட்டன. அப்படியிருந்தும் இது வரை யாரும் பரிசு விழுந்த அதிஷ்ட சீட்டை கொண்டு வரவில்லை. அமெரிக்க சட்டப்படி அதிஷ்ட சீட்டில் பரிசு விழுந்தால் ஓராண்டுக்குள் உரிமை கோர வேண்டும். இல்லையென்றால் அந்த அதிஷ்ட சீட்டு காலாவதியாகிவிடும்.

அதன்படி நேற்றுடன் 6 கோடி பரிசு விழுந்த அதிஷ்ட சீட்டு காலாவதியாகிவிட்டது. அதிஷ்ட சீட்டு வாங்குபவர்கள் மறந்து விடுவதால் அல்லது தொலைத்து விடுவதால் பரிசுத் தொகைக்கு யாரும் உரிமை கோராத சம்பவம் அமெரிக்காவில் பலமுறை நடந்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு புரூக்ளின் பகுதியில் விற்பனையான சீட்டுக்கு 68 மில்லியன் டாலர் அதாவது 430 கோடி பரிசு விழுந்தது. இந்த ஜக்பாட் தொகையை வாங்கவும் யாரும் முன்வரவில்லை. நியூயோர்க் வரலாற்றில் யாரும் உரிமை கோராத மிக அதிக அளவிலான பரிசுத் தொகை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.