வவுனியாவில் நாவல் வெளியீடும் வலயக்கல்விப் பணிப்பாளர் கௌரவிப்பும்!!

252

BOOK RELESE

வவுனியா ஸ்ரீ இராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தயாலயத்தில் நேற்று (28.07.2016) காலை புளியங்குளம் வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்டவரும், தற்பொழுது பிரான்சில் வசித்துவருபவருமாகிய சி.தணிகாசலம் அவர்களால் எழுதப்பட்ட ‘இலட்சிய தாகத்தில் இணையும் உள்ளங்கள்’ எனும் நாவல் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது.

பாடசாலை அதிபர் தே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு முன்னிலை இலக்கியவாதியாக கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.

பிரதம விருந்தினர்-
திருமதி அன்ரன் சோமராஜா
(வலயக்கல்விப் பணிப்பாளர்- வவுனியா தெற்கு)

சிறப்பு விருந்தினர்-
திரு கு.சிதம்பரநாதன்
(பீடாதிபதி வவுனியா தே.க.கல்லூரி )

கௌரவ விருந்தினர்கள்-
• திரு.இ.நித்தியானந்தன்
(வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர்)

• பண்டிதர் வீ.பிரதீபன்
(வவுனியா பிரதேச கலாசார உத்தியோகத்தர்)

• திரு க.தர்ஷன்
(கிராம சேவகர்- காத்தார் சின்னக்குளம்)

ஆகியோர் மேற்படி நிகழ்விற்கு விருந்தினர்களாக வருகை தந்து சிறப்பித்தனர்.

நூல்வெளியீடு : தமிழறிஞர் அகளங்கன் மற்றும் திருமதி ஆ.தணிகாசலம் முன்னிலையில், வலயக்கல்விப் பணிப்பாளர் அன்ரன் சோமராஜா வெளியிட்டு வைக்க அண்ணா நகர் அதிபர் சு.உதயகுமார் பெற்றுக்கொண்டார்.

மேற்படி நாவலின் நூலாராய்வுரையை ஆசிரியர் வே.முல்லைத்தீபன் நிகழ்த்தினார்.

தொடர்ந்து பணி ஓய்வு பெற இருக்கின்ற வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அன்ரன் சோமராஜாவின் சேவைநலனைப் பாராட்டி அவருக்கு மலர்மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி.. பாமாலை வழங்கி பாடசாலைச் சமூகம் அவருக்கான கௌரவத்தினை வழங்கியிருந்தது.

இறுதியாக ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையினை பாடசாலை ஆசிரியரும் நூலாசிரியரின் துணைவியுமாகிய திருமதி ஆ.தணிகாசலம் நிகழ்த்தியதும் மதிய போசனம் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

13866663_1763880897201575_1720297374_n 13867148_1763881937201471_1094795680_n 13874569_1763881987201466_2079130336_n 13874682_1763881993868132_1942389357_n 13874795_1763881957201469_373434374_n 13884428_1763880817201583_1974709629_n