10 இலட்சம் கரப்பான் பூச்சிகள் கூண்டுகளில் இருந்து எஸ்க்கேப் : நடுக்கத்தில் நகரமக்கள்!!

616

kara

சீனாவின் ஜியாங் ஷு மாகாணத்தில் பூச்சிகள் பண்ணை உள்ளது. இங்கு பாரம்பரிய மருந்துக்காக கரப்பான் உள்ளிட்ட பூச்சிகள் பராமரித்து வரப்படுகின்றன.

கடந்த 22ம் திகதி அங்கு பராமரித்து பாதுகாக்கப்பட்ட கரப்பான் பூச்சிகளை கூண்டுகளில் இருந்து யாரோ மர்மநபர் திறந்துவிட்டார். அங்கிருந்து 10 லட்சம் கரப்பான் பூச்சிகள் பறந்து தப்பி ஓடிவிட்டன.

அவை பூச்சி பண்ணை உள்ள டபெங் பகுதிகளில் பறந்தபடி சுற்றி திரிகின்றன. அவை பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்திலும், பீதியிலும் உள்ளனர்.

இந்த கரப்பான் பூச்சிகள் மிக விரைவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. எனவே, அவற்றின் முட்டைகளையும், குஞ்சுகளையும் அழிக்கும் நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.