ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை!!

673

Lady-doctor-com3528
கொடைக்கானலில் பள்ளி கட்டணம் செலுத்துமாறு ஆசிரியர் வற்புறுத்தியதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொடைக்கானலை சேர்ந்த சரோஜா என்பவரின் மகன் ராஜேஸ்வரன், அங்கிருக்கும் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

ராஜேஸ்வரன் பள்ளி கட்டணம் செலுத்தாத காரணத்தினால், அவனை கடந்த 3 நாட்களாக பள்ளிக்குள் தலைமை ஆசிரியர் அனுமதிக்கவில்லை.இதனால் மனமுடைந்த மாணவன் பூங்கா ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான், தனது மகனின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுத தாய், எனது மகனின் மரணத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியரே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.