அவுஸ்திரேலிய அணியின் தலைவராக மைக்கல் கிளார்க் தொடர்ந்தும் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3 -0 என்ற ஆட்டக்கணக்கில் இழந்த நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் அணியின் திறமை வெளிப்பாட்டு முகாமையாளர் அடம் பிரேசர் இதனைக் கூறியுள்ளார்.
நடைபெறவுள்ள இந்தியாவிற்கான கிரிக்கெட் விஜயம் தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் மூவர் அடங்கிய அணியின் கண்காணிப்பாளர் குழுவில் அடம் பிரேசரும் அடங்கியுள்ளார்.
இந்த நிலையில் மைக்கல் கிளார்க் உலகத் தரம் வாய்ந்த வீரர் எனக் கூறியுள்ள அடம் பிரேசர், அவரின் தலைவர் பதவிக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.