வெளிச்சமின்மை தொடர்பான விதிமுறைகளை மாற்ற வேண்டும்: அன்டி பிளவர்..!

317

andyபோதிய வெளிச்சமின்மை தொடர்பான விதிமுறைகளை மாற்ற வேண்டுமென இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் அன்டி பிளவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிபெறும் வாய்ப்பு, போதிய வெளிச்சமின்மை காரணமாக கைநழுவிப் போயிருந்தது.

227 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 4 ஓவர்களில் 21 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில், போட்டி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை இது தொடர்பான விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென அன்டி பிளவர் சுட்டிக்காட்டியுள்ளார்.