சமரச விவகாரத்துக் கோரி அமலாபால் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!!

330

Amala Paul

இயக்குனர் விஜய்யுடன் சமரசமாக விவகாரத்து செய்துதரக் கோரி அமலாபால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இயக்குநர் விஜய் – நடிகை அமலாபால் இருவரும் கடந்த 2014ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார்கள். 2 ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

அமலா பால் திருமணத்துக்குப் பின்னர் தொடர்ந்து சினிமாவில் நடித்துவருவதால் இதுவிஷயமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

அமலாபாலை விவகாரத்து செய்வது குறித்து இயக்குனர் விஜயும், அவரது தந்தை ஏ.எல்.அழகப்பனும் உறுதியாகக் கூறியிருந்தார்கள். இந்நிலையில், அமலாபால் இன்று சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் இயக்குனர் விஜய்யுடன் சமரச விவாகரத்து செய்துதரக் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நீதிபதி தீபிகா முன்னிலையில் விவாகரத்து செய்யப்போவதற்கான விருப்ப மனுவை நேரில் அளித்தார்

இவர்களது மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதன் பின்னர், இவர்களது விவகாரத்து குறித்த விடயங்கள் நீதிமன்றம் வாயிலாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குனர் விஜய்-அமலாபால் விவகாரத்து செய்யப்போகும் செய்தி நீதிமன்றம் வரை சென்றிருப்பது கொலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.