நூற்­றுக்­க­ணக்­கான கிலோ­மீற்றர் வெள்ளத்தால் அடித்துச் செல்­லப்­பட்டு பங்­க­ளா­தே­ஷுக்குள் சென்ற யானை!!

1654

E2

நூற்­றுக்­க­ணக்­கான கிலோ­மீற்றர் தூரம் வெள்­ளத்தில் அடித்­து­வ­ரப்­பட்ட யானை­யொன்று பங்­க­ளா­தேஷில் மீட்­கப்­பட்­டுள்­ளது.

முழு­மை­யாக வளர்ந்த மேற்­படி யானை இந்­தி­யாவின் அஸ்ஸாம் மாநி­லத்­தி­லி­ருந்து பங்­க­ளா­தே­ஷுக்குள் சென்­றி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பங்­க­ளா­தேஷின் ஜமால்பூர் மாவட்­டத்­தி­லுள்ள கிரா­ம­மொன்றின் குள­மொன்றில் மேற்­படி யானை தவிப்­பதை கிரா­ம­வா­சிகள் கண்­டனர். இந்த யானை நீரில் மூழ்கி இறக்கும் அபா­ய­மி­ருந்த நிலையில் இது தொடர்­பாக வன­வி­லங்­குத்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு தகவல் கொடுக்­கப்­பட்­டது.

அதை­ய­டுத்து, மேற்­படி யானைக்கு நேற்­று­முன்­தினம் மயக்க மருந்து ஏற்­றப்­பட்டு, வன­விலங்குத் து­றை­யி­னரும் கிரா­ம­வா­சி­களும் இணைந்து யானையை மேற்­படி குளத்­தி­லி­ருந்து வெளியே எடுத்தனர்.

இந்த யானை இந்­தி­யாவில் தனது யானைக் கூட்­டத்­தி­லி­ருந்து வெள்­ளத்தால் பிரிக்­கப்­பட்டு சுமார் 1000 கிலோ­மீற்றர் தூரம் இடம் பெயர்ந்திருக்கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.

இந்த யானையை மீண்டும் இந்­தி­யா­வுக்கு கொண்­டு­வ­ரு­வது குறித்து இந்­திய அதி­கா­ரிகள் முதலில் ஆராய்ந்­தனர். எனினும், இந்த யானையை அதன் யானைக்­கூட்டம் மீண்டும் ஏற்­காமல் விடலாம் என்­பதால் இத்­திட்­டத்தை இந்­திய அதி­கா­ரிகள் கைவிட்­டனர்.

அதை­ய­டுத்து, பங்களாதேஷின் டாக்காவுக்கு அருகிலுள்ள வனவிலங்குப் பூங்காவொன்றுக்கு இந்த யானையை வாகனம் மூலம் கொண்டு செல் வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

E1 E3