ரஷ்யாவில் நடைபெற்ற நுளம்புக்கடி போட்டியில் 9 வயது சிறுமி 43 நுளம்புக்கடிகளை வாங்கி சாதனை படைத்துள்ளார்.
ரஷ்யாவில் வருடா வருடம் நுளம்புக்கடித் திருவிழா நடைபெறும். அது போல இந்த ஆண்டிற்கான நுளம்புக்கடித் திருவிழா கடந்த 14 ஆம் திகதி பெரஸ்னிகி என்ற நகரில் நடைபெற்றது.
இதற்காக அங்குள்ள காட்டு பகுதிக்குள் போட்டியில் பங்குபெறும் அனைவரும் உடம்பில் ஆடை எதும் இல்லாமல் அங்கு சென்று தங்கி வரவேண்டும்.
அது போல பலதரப்பட்ட வயதினை சேர்ந்த பொதுமக்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். பலரும் நுளம்புக்கடி தாங்காமல் வெகு விரைவாக காட்டிலிருந்து வேகமாக வெளியே வந்து விட்டனர்.
இதில் இல்யுகினா என்ற 9 வயது சிறுமி அதிக நுளம்புக்கடி வாங்கி இறுதியாக வெளியே வந்தார்.
இவர் உடம்பில் 43 நுளம்புக்கடிகள் உள்ளதாகவும், இச்சிறுமியை தான் அதிக அளவில் நுளம்புகள் கடித்துள்ளதாக கூறி நடுவர்கள் அச்சிறுமிக்கு முதல் பரிசு கொடுத்து பாராட்டினர்.
மேலும் இச்சிறுமி தான் நுளம்புகளுக்கு பிடித்த மிகவும் டெஸ்டியான பெண் என்ற செல்ல பட்டத்தையும் அவருக்கு கொடுத்தனர்.
ரஷ்யாவில் நுளம்பால் ஜிகாவைரஸ் பரவும் நிலையில், அந்நாட்டில் நுளம்புக்கடித் திருவிழா நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.