6 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த10 வயதுச் சிறுவன்!!

903

Abuse

உத்திரபிரதேசத்தில் தண்ணீர் கேட்டு வந்த 6 வயது சிறுமியை 10 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் இன்சாலி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு ரிக்க்ஷா ஓட்டியின் 6 வயது மகள், அருகில் இருந்த வீட்டில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.

வீட்டில் இருந்து வெளியே வந்த 10 வயது சிறுவன் உள்ளே வா தண்ணீர் தருகிறேன் என கூறி அழைத்துள்ளான்.

ஆனால் உள்ளே சென்றதும் அச்சிறுவன் திடீரென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் பயந்து போன அச்சிறுமி தொடர்ந்து கூச்சலிட்டு அழுதுள்ளார்.

இச்சத்தத்தை கேட்ட அருகில் இருந்த சிறுமியின் உறவினர்கள் அந்த சிறுவனிடன் இருந்து காப்பாற்றி, அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.

இதனால் சிறுவனை பொலிசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

ஒரு 10 வயது சிறுவன், 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது, பொற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.