12 வயதில் கடத்தப்பட்டு 400 பேரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட இளம் பெண்!!

1277

Abuse

டில்­லியைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் தான் 12 வயதில் கடத்­தப்­பட்­ட­துடன், 10 ஆண்­டு­க­ளாக கும்பலாக 400இற்கும் மேற்­பட்­ட­வர்­களால் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கடத்தியவர்­க­ளி­ட­மி­ருந்து தப்­பி வந்து பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

கடத்­தப்­பட்ட சம்­பவம் தொடர்­பாக பெண்ணின் தாய், கடந்த 2006ஆம் ஆண்டு தனது 12 வயது மகள், தங்கை வீட்­டுக்கு செல்லும் போது, கடத்­தப்­பட்டுள்ளார் என பொலிஸில் முறைப்­பாடு செய்துள்ளதா­கவும் கடத்­தப்­பட்ட பெண் 10 வரு­டங்­க­ளுக்கு பிறகு, 22 வயது பெண்­ணாக பல்­வேறு நபர்­களால் சித்­தி­ர­வ­தைக்­குட்­ப­டுத்­தப்­பட்டு தனது வீட்­டுக்கு திரும்பி வந்­துள்ளார் என்றும் பொலிஸில் தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து பாதிக்­கப்­பட்ட பெண் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்­ள­தா­வது,
சம்­ப­வத்­தன்று எனது சித்தி வீட்­டிற்கு செல்லும் போது சிலர் என்னை மயக்­க­ம­ருந்து தட­விய கைக்­குட்­டையால் என் முகத்தை அழுத்­தி­யதால் மயக்­க­ம­டைந்தேன்.

அதன் பின் ஒரு விப­சார கும்­பலால் யாரோ சில­ருக்கு விற்­கப்­பட்டேன். என்னை பல­முறை கும்பலாகச் சேர்ந்து பாலியல் வல்­லு­ற­வுக்­குட்ப­டுத்­து­வார்கள்.

அவர்கள் மேலும் பல விப­சார தர­கர்­களால் என்னை பல­ருக்கு விற்­பனை செய்­தார்கள். சில காமுகர்கள் என்னை பாலியல் வல்­லு­றவுக்குட்படுத்தியதோடு மட்­டு­மல்­லாமல் சிக­ரெட்டால் சூடு வைத்தும் உடல் ரீதி­யாகவும் என்னை துன்­பு­றுத்­து­வார்கள். எனது உடல் தீ காயங் கள் மட்டுமில்லாமல் மனதும் காய­ம­டைந்­துள்­ளது.

இவ்­வாறு பல கொடு­மை­களை அனு­ப­வித்து எனது வாழ்க்­கையை பதா­ளத்தில் தொலைத்துள்ளேன். மேற்கு வங்கம், பஞ்சாப், குஜராத், ஹரி­யானா, டில்லி ஆகிய மாநி­லங்­க­ளுக்கு விற்­கப்­பட்டு சித்­தி­ர­வதை அனு­ப­வித்­துள்­ள­தாக தெரி­வித்­துள்­ள­துடன், கடத்­தப்­பட்ட நாளி­லி­ருந்து இது­வரை 400இற்கும் மேற்­பட்­டோரால் கும்­ப­லாக பாலியல் வல்­லு­ற­வுக்கு ஆளாகியுள்ளேன் என்றும் அந்த பெண் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின்படி தற்போது, 61 மற்றும் 70 வயதான இரண்டு முதியோர் உட்பட 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.