ஓடும் காரில் பெண் இராணுவ அதிகாரியை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்!!

659

Abuse

இராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வரும் பெண் ஒருவர், கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரலில் தன்னுடைய கணவர் மற்றும் வீட்டு வேலைக்கார பெண்ணுடன் புனேயில் இருந்து பீட் மாவட்டம் பார்லியில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அன்றைய தினம் இரவில் அவர்கள் புனேயில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டனர்.

அப்போது அவர்களது மேஜைக்கு அருகே தீபக் (வயது 22), அபய் போரே (23), விஜய் (25) மற்றும் சுனில் (24) ஆகியோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, இராணுவ பெண் அதிகாரி அணிந்திருந்த தங்க நகைகள் அவர்களது கண்ணை உறுத்தியது. எனவே, அவருடைய நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.

அதன்படி பெண் அதிகாரி காரில் ஏறி கிளம்பியதும், மேற்படி 4 பேரும் மற்றொரு வாடகை காரில் அவர்களை வேகமாக பின்தொடர்ந்து சென்று, சாலையின் குறுக்கே காரை நிறுத்தி இராணுவ அதிகாரியின் காரை மறித்தனர்.

இதைத்தொடர்ந்து, அவரது கார் நின்றது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அக்கும்பல், பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரையும் காரில் இருந்து தரதரவென வெளியே இழுத்தனர்.

மேலும், இராணுவ அதிகாரியும், அவரது வேலைக்கார பெண்ணும் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்தனர். தடுக்க வந்த அவரது கணவரை கண்மூடித்தனமாக தாக்கினர்.

பின்னர், தாங்கள் வந்த காரில், அந்த பெண் அதிகாரியை கடத்திச் சென்றனர். மேலும், ஓடும் காரில் வைத்து அவரை தீபக்கும், அபய் போரேவும் பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர், அவரை நிர்வாண கோலத்தில் சாலையில் போட்டு விட்டு தப்பிவிட்டனர்.

மராட்டியம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அகமத்நகர் மற்றும் பீட் மாவட்ட பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, மறுநாளே இதற்கு காரணமான 4 பேரையும் கைது செய்தனர். இந்த கொடூர குற்றச்சம்பவத்தின் பின்னணி காரணமாக அவுரங்காபாத் மோக்கா நீதிமன்றில் வழக்கு விசாரணை நடந்தது.

இரு தரப்பு வாதமும் நிறைவு பெற்றதையடுத்து நீதிபதி எஸ்.எஸ்.கோசவி சமீபத்தில் தீர்ப்பு அளித்தார். அதன்படி, இராணுவ பெண் அதிகாரியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக அவர்கள் 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், நகைகளை கொள்ளையடித்த குற்றத்துக்காக தலா ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.