ஆசிரியையுடன் ஓட்டம் பிடித்த மாணவன் மர்மமான முறையில் மரணம்!!

663

Student

சென்னையில் ஆசிரியை ஒருவருடன் வீட்டை விட்டு ஓடிய மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அருகேயுள்ள ஒரு கல்லூரியில், அரவிந்த் குமார் என்ற மாணவன் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கும் கணனி ஆசிரியை கனிமொழிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

கணனி ஆசிரியையான கனிமொழிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் மாணவரும் ஆசிரியையும் கடந்த 16ம் திகதி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து ஆசிரியை மற்றும் மாணவர் ஆகிய இரு வீட்டு தரப்பும், சேலையூர் பொலிசில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், 18ம் திகதி கனிமொழி மட்டும் வீடு திரும்பியுள்ளார். ஆனால் மாணவரை காணவில்லை.

இந்த சமயத்தில் கடந்த ஞாயிறன்று சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையம் அருகே மாணவர் அரவிந்த்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

ஆசிரியையின் கணவர், ஏற்கனவே அரவிந்த்தை மிரட்டியிருந்ததாக மாணவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர் அரவிந்தகுமாரை கொலை செய்திருக்கலாம் எனவும் மாணவரின் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.