கணவன் மீதுள்ள கோபத்தில் குழந்தையைத் தாக்கும் தாய்!!(அதிர்ச்சி வீடியோ)

643

Attack

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பெய்ரேலி நகரில் வசிக்கும் ஒருபெண் தனது கணவர் மீது உள்ள வெறுப்பால் பச்சிளம் குழந்தை என்று பார்க்காமல் தனது ஆண் குழந்தையை சரமாரியாக தாக்கும் காட்சிகள் இணையதளங்களின் மூலம் வீடியோவாக வெளியாகி உள்ளன.

இது குறித்து அந்தப் பெண்ணின் கணவர் செய்தியாளர்களிடம் பின்வருமாறு தெரிவித்தார்..

எனக்கும் எனது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் என் மீதுள்ள வெறுப்பால் பச்சிளம் குழந்தை என்று கூட பார்க்காமல் என் குழந்தையை சரமாரியாக தாக்கியதுடன், இந்த கொடுமையை தடுக்க வந்த என்னையும் அவர் கண்மூடித்தனமாக தாக்கினார்.

இதனை ஆதாரத்துடன் நிரூபிக்க எனது வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தினேன். அதில் அவர் என் மகனை துன்புறுத்தும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளேன். இச் சம்பவம் காரணமாக நான் மிகவும் மன வேதனையில் உள்ளேன். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தீர்மானித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

பேயாக மாறிய ஒரு தாயிடம் சிக்கிய அந்த பச்சிளம் குழந்தை படும் வேதனையை காண..