சடலத்தை இரண்டாக உடைத்து தூக்கிச் சென்ற கொடுமை : மீண்டும் அரங்கேறிய கொடூரம்!!

608

Body

ஒடிசாவில் இறந்தவரின் சடலத்தை இரண்டாக உடைத்து, அதை பிளாஸ்டிக் பையில் போட்டு மருத்துவ ஊழியர்கள் தூக்கிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசாவை சேர்ந்த சாலாமணி பாரிக்(76) என்ற பெண் கடந்த புதன்கிழமை ரெயில் விபத்தில் பலியானார். இதனால் இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள பலசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பலசூருக்கு ஆட்டோவில் உடலை எடுத்துச்சென்றால் செலவாகும் என்பதற்காக, உள்ளூர் சுகாதார மைய ஊழியர்கள் பாரிக்கின் இடுப்பு பகுதியில் ஏறி நின்று இரண்டாக உடைத்து, அதை பிளாஸ்டிக் பையில் போட்டு, துணியை வைத்து கட்டி கம்புகளில் கட்டித் தூக்கிச்சென்றனர். இச்சம்பவத்தை கண்ட அவரின் மகன் செய்வதறியாது கண்கலங்கியுள்ளார்.

மேலும் ஒடிசாவில் மருத்துவமனை நிர்வாகம் வாகனத்திற்கு ஏற்பாடு செய்யாததால் மாஜ்ஹி என்பவர் தனது மனைவியின் சடலத்தை தோளில் போட்டு 10 கிலோமீற்றர் நடந்து சென்றார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அரசால், அரசு மருத்துவமனையில் இருந்து இலவசமாக பூத உடலை கொண்டு செல்ல ‘Mahaparayana’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.