தமிழகத்தில் 8 மாத பெண் குழந்தை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிசார் பீகாரை சோர்ந்த சஞ்சித் என்ற நபரை கைது செய்துள்ளனர்.
கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டைகவுண்டன் பாளையத்தில் ஒரு தென்னை நார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இதில் டும்குன் (வயது- 24), அவரது மனைவி மலாதேவி (வயது- 20) ஆகியோரும் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ரீட்டா (வயது- 2) சரிதா என்ற 8 மாத கைக்குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்-மனைவி 2 பேரும் குழந்தை சரிதாவை வீட்டில் தூங்க வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். மில்லிருந்து பணி முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பிய போது, குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளது.
குழந்தையின் உடலை கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் குழந்தையை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, மில்லில் வேலை பார்த்த விடுதியில் தங்கியிருந்த அனைவரையும் விசாரித்த போது சஞ்சித் மட்டும் அங்கு இல்லை என்பது தெரிய வந்ததுள்ளது.
இதையடுத்து பொலிசாருக்கு சஞ்சித் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை தேடிய போது அவர் ரயிலில் பீகார் செல்ல முடிவு செய்து பேருந்திற்காக காத்திருந்துள்ளார்.
பொலிசார் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தியதில் சஞ்சித் நடந்ததை கூறி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.






