கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு நேர்ந்த துயரம் : நெஞ்சைப் பதறவைக்கும் காணொளி!!

560

Loan1

ராஜஸ்தானில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை, சிலர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோஸ்கித்தால் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஜபாரிக்கா கிராமத்தை சேர்ந்த மிதுலால் என்பவருக்கு 30000 ரூபாய் பணம் கடனாக கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ரமேஷ் தன் வீட்டில் மரவேலைகள் நடப்பதால், தான் கொடுத்த பணத்தை மிதுலாலிடம் கேட்டுள்ளார். இதனால் மிதுலால் மகள் லட்சுமி கடந்த புதன்கிழமை, ரமேஷ்-யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டில் வந்து பணம் பெற்று செல்லும்படி கூறியுள்ளார்.

இதனால் அன்று மாலை பணம் பெறுவதற்காக வந்த ரமேஷை மிதுலால் மகன் மற்றும் சிலர் உருட்டுகட்டைகளால் தொடர்ந்து தாக்கினர்.

இதனால் நிலைகுலைந்த ரமேஷ் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை அடித்த போது எடுத்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

மேலும் ரமேஷ்சின் குடும்பத்தினர் பொலிசில் புகார் தெரிவித்ததை அடுத்து வீடியோவில் உள்ள சிலரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

loan