பாடசாலைக் கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 5ம் வகுப்பு மாணவி!!

758

Baby Born

கர்நாடகாவில், 5ம் வகுப்பு படித்து வரும் 14 வயதான பழங்குடி மாணவி ஒருவர் பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் அப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதேஸ்வரன் மலை மெதுகநானே பகுதி மலைவாழ் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர் ரூபா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பள்ளி படிப்பை 2 வருடம் இடைநிறுத்தி இருந்த இவர், 14 வயதில் 5ம் வகுப்பில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.

இவர் கடந்த 25ம் திகதி வழக்கம் போல பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி ஊழியர்கள் அவரை சுத்தம் செய்வதற்காக கழிவறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் ரூபாவுக்கு பிரசவம் ஆகும் வரை அவரது உடலில் எந்தவிதமான மாற்றமும் தென்படவில்லை. இதனால் அவர் கர்ப்பமாக இருந்ததும் யாருக்கும் தெரியவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறியதாவது, ரூபாவின் இந்த நிலைக்கு அவரது மாமா Shivu என தெரிவித்துள்ளனர்.