தந்தையின் தோளில் உயிரைவிட்ட மகன் : தொடரும் அவலம்!!

590

Dead

கடந்த சில நாட்களாக மருத்துவமனையின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் படும் துன்பங்கள் தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

மருத்துவமனை நிர்வாகம் அவசர ஊர்தி அளிக்கவில்லை, சிகிச்சை அளிக்கவில்லை என்பதை தான் அவர்கள் குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது,

கான்பூரை சேர்ந்த சுனில் குமார் என்பவரின் 12 வயது மகன் அன்ஷுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் அவனை கான்பூரிலுள்ள லஜ்பத் ராய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சிகிச்சை தர மருத்துவர்கள் மறுத்ததாகவும், எப்படியாவது அங்கேயே சிகிச்சை தருமாறு அவர்களை மன்றாடிக் கேட்டுக்கொண்டும் அவர்கள் கேட்கவில்லை என்றும் சுனில் குமார் கூறியுள்ளார்.

எனவே, தனது மகனை தோளில் சுமந்துகொண்டு மற்றொரு மருத்துவமனைக்கு நடந்து செல்லும் வழியில், தந்தையின் தோளிலேயே மகனின் உயிர் பிரிந்துள்ளது.

ஆனால் இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.