சைக்கிளோட்டப் போட்டியின்போது வீரர் மீது பாய்ந்த மான்!!

634

D1

சைக்கிளோட்டப் போட்டியொன்றில் பங்குபற்றிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் மீது மான் ஒன்று மோதிய சம்பவம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் ட்ரையத்லன் எனும் மூன்றாம் போட்டியின் ஒரு பகுதியாக கடந்த ஞாயிறன்று சைக்கிளோட்டப் போட்டியொன்றில் வீரர்கள் பங்குபற்றிக்கொண்டிருந்தனர்.

இதன்போது, பீனிக்ஸ் பாக் எனும் பூங்காவுக்கூடாக போட்டியாளர்கள் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களை மான் கூட்டமொன்று எதிர்கொண்டது.

அவற்றில் ஒரு மான் வீதியை பாய்ந்து கடக்க முயன்றபோது, ஷேன் ஓ ரெய்லி எனும் வீரர் மீது மோதியது. 30 வயதான ஷேன் ஓ ரெய்லி, அந்த பாரிய மான் தன் மீது மோதியதால் நிலை தடுமாறி வீழ்ந்தார்.

இக்காட்சிகளை அங்கிருந்த புகைப்படப்பிடிப்பாளர் ஒருவர் படம்பிடித்துக்கொண்டார். போட்டியின் எல்லைக்கோட்டிலிருந்து 10 கிலோமீற்றர் தூரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது.

பின்னர் சுதாகரித்துக் கொண்டு எழுந்து மீண்டும் போட்டியில் பங்குபற்ற ஆரம்பித்து 2 மணித்தியாலங்கள், 25 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்தார்.

இப்பூங்காவில் சுமார் 300 மான்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்போட்டியின் பின்னர் ஷேன் ஓ ரெய்லி கருத்துத் தெரிவிக்கையில், “இச்சம்பவத்தால் எனது தோளிலும் தலையிலும் வலி ஏற்பட்டது. தலைக்கவசம் என்னைக் காப்பாற்றியது” என்றார்.

D2 D3