தண்ணீரில் மணிக்கு 500 கிலோ மீட்டர் ஓடும் மோட்டார் சைக்கிள்!!

730

Motor Cycle

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக் கூடிய மோட்டார் சைக்கிளை உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார்.

பிரேசிலின் சாவோ பாலோ நகரைச் சேர்ந்த ரிக்கேர்டே ஆஸேவெடே அந்த நபர் தனது மோட்டார் சைக்கிள் குறித்துக் கூறும்போது,

“எனது மோட்டார் சைக்கிளுக்கு ‘டி பவர் எச்20’ என்று பெயர் சூட்டியுள்ளேன். இந்த மோட்டார் சைக்கிளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பட்டரியில் இருந்து கொள்கலத்தில் ஊற்றப்பட்ட தண்ணீரில் பாய்ச்சப்படும் மின்சாரமானது, அந்த தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் பொதிந்திருக்கும் ஹைட்ரஜனின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.

இதன் மூலம் கிடைக்கும் உந்துசக்தியால் எனது மோட்டார் சைக்கிள் காற்றை கிழித்துக்கொண்டு ஓடும். இந்த மோட்டார் சைக்கிள் ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 500 கிலோ மீட்டர் வரைசெல்லும் என்பதையும் நிரூபித்திருக்கிறேன்” என்கிறார்.

பிரேசில்காரர் சொல்வது நிஜமானால், எரிபொருள் பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்படும் என்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் மிகுந்த நன்மை ஏற்படும்.