திரு­ம­ணத்­துக்­காக ஏ.ரீ.எம் நிலை­யத்தில் கொள்­ளை­ய­டித்த இளை­ஞன் சிறை­யில்!!

648

Kollai

திரு­ம­ணத்­துக்­காக கொள்­ளை­ய­டித்த புது­மாப்­பிள்ளை மற்றும் அவ­ரது நண்­பர்­களை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

சென்னை பாரி­முனை பகு­தியில் கடந்த வாரம் ஏ.ரீ.எம். நிலை­யங்­க­ளுக்கு பணத்தை நிரப்ப சென்ற வேன், பணத்­துடன் கடத்­தப்­பட்­டது. அதி­ர­டி­யாக பூக்­கடை துணை கமி­ஷனர் ஜெயக்­குமார் தலை­மை­யி­லான பொலிஸ் குழு கள­மி­றங்கி வேன் சாரதி ராஜேஷ், அவ­ரது நண்பர் லிங்கம் ஆகி­யோரை கைது செய்­தது.

அய­னா­வ­ரத்தில் உள்ள தனியார் நிறு­வனம் மூலம் ஏ.ரீ.எம் நிலை­யங்­க­ளுக்கு பணம் நிரப்­பப்­பட்டு வரு­கி­றது. இந்த நிறு­வனம் மூலம் பாரி­மு­னையில் உள்ள ஏ.ரீ.எம் நிலை­யங்­க­ளுக்கு கடந்த வாரம் கொண்டு வரப்­பட்­டது. 50 இலட்­சத்­துக்கும் அதி­க­மான பணம் வேனில் இருந்­துள்­ளது.

குறு­கிய சந்தில் இருந்த ஏ.ரீ.எம் நிலை­யத்­துக்கு வேன் செல்ல முடி­யா­ததால் வீதியில் வேனை நிறுத்­தினர். பின்னர் பலத்த பாது­காப்­புடன் பணம் ஏ.ரீ.எம் நிலை­யத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டது.

இந்த சம­யத்தில் பெரம்­பூரை சேர்ந்த சாரதி ராஜேஷ் மட்டும் வேனில் அமர்ந்­தி­ருந்­துள்ளார். அப்போது அவ­ருக்கு ஒரு தொலை­பேசி அழைப்பு வந்­துள்­ளது. வேனை விட்டு இறங்கி ராஜேஷ் பேசி­யுள்ளார்.

இந்த சம­யத்தில் மின்னல் வேகத்தில் வேனை எடுத்த மர்ம நபர்கள், அங்­கி­ருந்து சென்­றுள்­ளனர்.
ராஜேஷும் திருடன், திருடன் என்று சத்தம் போட்­டுள்ளார். இதை­ய­டுத்து பாது­கா­வ­லர்கள் அங்கு விரைந்­துள்­ளனர். இது­கு­றித்து வடக்கு கடற்­கரை பொலி­ஸா­ருக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உட­ன­டி­யாக வேன் இலக்கம் மற்றும் அடை­யாளம் அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் தெரி­விக்­கப்­பட்டு பாது­காப்பு நட­வ­டிக்கை பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த சம­யத்தில் ராய­புரம் பகு­தியில் வேன் மட்டும் நிறுத்­தப்­பட்­டி­ருந்­துள்­ளது. வேனை பறிமுதல் செய்த பொலிஸார், தொடர்ந்து பணம் கொண்டு சென்ற நிறு­வன ஊழி­யர்­க­ளிடம் விசா­ரணை செய்தனர்.

அப்­போது சாரதி ராஜேஷ் மீது சந்­தேகம் ஏற்­பட்­டது. அவ­ரிடம் தனி­யாக பொலிஸார் விசா­ரணை செய்­துள்­ளனர். அவ­ரது செல்­போ­னுக்கு வந்த அழைப்­பு­க­ளையும் பொலிஸார் ஆய்வு செய்­தனர்.

அப்­போ­துதான் கொள்­ளை­ய­டிக்க திட்டம் திட்­டி­யதே ராஜேஷ் என்­பது பொலி­ஸா­ருக்கு தெரியவந்தது. உட­ன­டி­யாக ராஜேஷை பொலிஸார் கைது செய்­தனர்.

தொடர்ந்து வேனைக் கடத்­திய ராஜேஷின் நண்­ப­ரான வியா­சர்­பா­டியை சேர்ந்த லிங்­கத்­தையும் பொலிஸார் கைது செய்து இரு­வ­ரி­ட­மி­ருந்து 26 இலட்சம் ரூபாயை மீட்­டனர்.

இது­கு­றித்து பொலிஸ் அதி­கா­ரிகள் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, “கைதான ராஜேஷ், பணம் நிரப்பும் நிறுவ­னத்தில் ஏற்­க­னவே வேலை­பார்த்­தவர். இப்­போது சொந்­த­மாக வேன் ஓட்டி வரு­கிறார்.

பணம் சப்ளை செய்யும் நிறு­வ­னத்தில் சாரதி இல்­லாத சம­யத்தில் அங்கு பணிக்கு செல்வார் ராஜேஷ். அப்­படி தான் நேற்றும் வேலைக்கு சென்­றுள்ளார். ராஜேஷின் சொந்த ஊர் திரு­வள்ளூர் மாவட்டம். 8ஆம் தரம் வரை படித்த அவ­ருக்கு வேன் வாங்­கி­யதில் 4 இலட்சம் ரூபா கடன் உள்­ளது.

மேலும், நேற்று முன்­தினம் சிறு­னி­யத்தில் அவ­ருக்கு திரு­மணம் நடக்­க­வி­ருந்­தது. திரு­ம­ணத்­துக்கு தேவை­யான பணமும் கையில் இல்லை. இந்த சம­யத்தில் இலட்­சக்­க­ணக்­கான பணத்தை பார்த்தவுடன், லிங்­கத்தின் மூலம் அதை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். திருமணம் நடக்க இருந்­த புதுமாப்பிள்ளை ராஜேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றனர்.