வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று(07.09.2016) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
10 நாட்கள் இடம்பெறும் இத் திருவிழாவில் தினமும் சிறப்புப் பூஜைகள் இடம்பெற்று சுவாமி ஊர்வலம் இடம்பெறும்.
இந் நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
-கோபி-