வவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று!!

366

 
வவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று வியாழக் கிழமை (08.09.2016) கொண்டாடபட்டது.

புனித அன்னை மரியாளின் பிறந்ததினமான இன்று பழமை வாய்ந்ததும் வரலாற்று சிறப்புமிக்க அடைக்கல அன்னையின் திருநாள் இன்று மிகவும் சிறப்பாக கொண்டாடபட்டது.

வவுனியா பங்குத்தந்தை அருட்பணி ச.சத்தியராஜ், அருட்பணி அ.லக்ஸ்ரன் டீ சில்வா, அருட்பணி மற்றும் ஓமந்தை பங்குத்தந்தை எஸ்.டக்ளஸ் மில்ரன் லோகு தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்ட கூட்டுத் திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.

விசேட அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டிருந்தார்.

dsc_0005 dsc_0008 dsc_0010 dsc_0014 dsc_0015 dsc_0020 dsc_0033 dsc_0059 dsc_0065 dsc_0077 dsc_0078